குரோம்பேட்டையில் சரக்கு வேன் மோதி கணவன்-மனைவி பலி

குரோம்பேட்டையில் ரோட்டை கடந்த போது சரக்கு வேன் மோதியதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குரோம்பேட்டையில் சரக்கு வேன் மோதி கணவன்-மனைவி பலி
Published on

தாம்பரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவரது மனைவி மல்லிகா (50). இருவரும் நேற்று மாலை குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின்னர் இன்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு நடந்து வந்தனர்.

அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி சென்ற சரக்கு வேன் திடீரென மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மல்லிகா பரிதாபமாக இறந்தார்.

ராஜேந்திரன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டுசென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் ஜான் விக்ரமை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com