வாஜ்பாய் மறைவு: புதுவை நகர பகுதியில் கடைகள் அடைப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி புதுவை நகர பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. #AtalBihariVajpayee #RIPVajpayee
வாஜ்பாய் மறைவு: புதுவை நகர பகுதியில் கடைகள் அடைப்பு
Published on

புதுச்சேரி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானார். இந்த தகவல் புதுவை முழுவதும் பரவியது.

இதனால் வியாபாரிகள் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்து விடுமோ? என்ற அச்சத்துடன் கடைகளை தொடர்ந்து நடத்தலாமா? அல்லது மூடி விடலாமா? என்ற நிலையில் இருந்தனர்.

இன்று காலை 10 மணி வரை நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.

கடை ஊழியர்களும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடை முன்பு காத்து இருந்தனர். அதன் பிறகு ஒருசில கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com