

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் சற்று ஆவேசம் அடைந்த வைகோ, இவ்வாறு என்னிடம் கேள்வி கேட்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்றார்.