வடவள்ளி அருகே வீட்டுக்கு நடந்து சென்ற கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு

வடவள்ளி அருகே வீட்டுக்கு நடந்து சென்ற கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி அருகே வீட்டுக்கு நடந்து சென்ற கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு
Published on

கோவை:

கோவை வடவள்ளி நவவூர் பிரிவை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சுமதி (வயது 38). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சுமதி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த சுமதி இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com