விண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா

செயற்கை கோளை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் சோதனை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, விண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. #IndiaAntisatelliteTest #SpaceDebris
விண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா
Published on

விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. இந்த தகவலை நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
 

இந்த நிலையில், மிஷன் சக்தி சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்தது பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும்.

அதேசமயம், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது. விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சோதனை வடிவமைக்கப்பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com