அமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 1,431 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. #USSnowStorm
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 1,431 விமானங்கள் ரத்து
Published on

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு பனி மழை போன்று கொட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பாதி அளவு பகுதி வெள்ளை போர்வையால் போர்த்தியது போன்று காட்சி அளிக்கின்றன.

தெற்கு டென்வரில் உள்ள சாங்ரீ டி கிறிஸ்டோ மலைப் பகுதியில் 45 செ.மீ. அளவுக்கு பனி உறைந்து கிடக்கிறது. மேற்கு மிசோரி மற்றும் செயிண்ட் லூயிஸ் பகுதியில் 41 செ.மீ. அளவுக்கு பனி கொட்டிக்கிடக்கிறது.

பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com