

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் அங்கு தாக்குதல் நடத்தி வந்தன.
இந்த நிலையில், அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், தான் பதவி விலகுவதாக கூறி, டிரம்பிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்த நிலையில், துணை ராணுவ மந்திரி பேட்ரிக் சனாகானை பொறுப்பு ராணுவ மந்திரியாக நியமித்து, அவர் ஜனவரி 1-ந் தேதி முதல் பணியை தொடங்குவார் என டிரம்ப் நேற்று அறிவித்தார்.