

முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அவரது கணவர் போன் மூலம் தலாக் என மூன்று முறை கூறி விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் போலீசாரிடம் போன் மூலம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் இரு வீட்டாரும் வரவழைக்கப்பட்டு காவல்நிலையத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒத்து வரவில்லை.