ஒழுங்காக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கல்தா - உ.பி அரசு அதிரடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒழுங்காக பணியாற்றாத அரசு ஊழியர்களை 50 வயதில் கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. #UPGovt
ஒழுங்காக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கல்தா - உ.பி அரசு அதிரடி
Published on

லக்னோ:

அரசு அதிகாரிகள் முறையாக பணியாற்றுவது இல்லை என்பது அனைத்து தரப்பினரும் சொல்லும் பொதுவான குற்றச்சாட்டு ஆகும். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31-ம் தேதியில் இருந்து இந்த வயது வரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் இது பின்பற்றப்படவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  #UPGovt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com