

ஆறுமுகநேரி:
காயல்பட்டிணம் கொம்புதுறையை சேர்ந்தவர் மரியஅந்தோணி. இவரது மகன் ஸ்டைபன் சுரேஷ் (வயது 36). மீனவர். இவர் தனக்கு திருமணமாகவில்லையே என விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்த கொண்டார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.