ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் - ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்டோனியோ குட்டரஸ்
அண்டோனியோ குட்டரஸ்
Published on

நியூயார்க்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் - காந்தகார் நெடுஞ்சாலையில் தற்கொலைப் படையினர் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வழியாக சென்ற பேருந்தில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட  34 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இது தலிபான் பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பொதுமக்கள் மீதான இத்தகைய தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. இதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com