உளுந்தூர்பேட்டை அருகே 15 அடி பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து- 20 பயணிகள் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 15 அடி பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
ஆம்னி பஸ் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
ஆம்னி பஸ் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

உளுந்தூர்பேட்டை:

மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இதில் மொத்தம் 36 பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புறவழிச்சாலை திருச்சி- சென்னை மேம்பாலத்தை கடந்து சென்றது. அப்போது திடீரென்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மதுரையை சேர்ந்த பிரபாகரன்(45), முத்துக்குமார்(50), சென்னையை சேர்ந்த கிருத்திகா(24), லட்சுமி பிரியா(23), பாலுசாமி(52), நெல்லையை சேர்ந்த கணேசமூர்த்தி(52) உள்பட 20 பேர் இடிபாடுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர் பேட்டை போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com