

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வழங்க இருப்பதாக அம்மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்து இருந்தார். அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஷயத் அல் நயான், பிரதமர் நரேந்திர மோடியுடன் டெலிபோனில் பேசியபோது, இத்தகவலை தெரிவித்தார் என்றார்.
ஆனால் வெளிநாடுகளின் நிதி உதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தநிலையில் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமிரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா
முன்னதாக கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரக மன்னர் ஷேக் கலிபா பின் ஷயத் அல் நயான் துபாயில் வாழும் கேரள தொழில் அதிபர் எம்.ஏ.யூசுப் அலி மூலம் முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.