

நாளைமறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியிருந்தது.
மேலும், இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவானதாக காணப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒருமுறை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், U19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு, தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஆக்கப்பூர்வமான அறிவுரை வழங்கியுள்ளார்.
சனிக்கிழமை விளையாட இளைஞர்களுக்கு ‘‘நீங்கள் பெவிலியனில் உட்கார்ந்து இருந்தால் ரன்கள் அடிக்க இயலாது. அதேபோல் களமிறங்கி, பின்னர் உடனடியாக பெவிலியன் திரும்பினாலும், ரன்கள் அடிக்க இயலாது.