காஷ்மீரில் தீவிரவாதிகள் குண்டுகளை எறிந்து தாக்கியதில் 2 வீரர்கள் காயம்

காஷ்மீரில் நேற்று இரவு கையெறி குண்டுகளை எறிந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்கியதில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் குண்டுகளை எறிந்து தாக்கியதில் 2 வீரர்கள் காயம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்புப் படை முகாம்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள் காயமடைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையின் 180வது படைப்பிரிவு முகாம் மீது ஏவுகணை குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இரு பாதுகாப்புப் படை அதிகாரிகள் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com