செந்துறை அருகே ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது

செந்துறை அருகே ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
செந்துறை அருகே ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது
Published on

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ். மாத்தூர் 108 ஆம்புலன்ஸ்க்கு உஞ்சினி கிராமத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்சுடன் உஞ்சினிக்கு சென்றனர். அங்கே சென்ற ஊழியர்கள் அவசர அழைப்பு விடுத்தவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் ஓட்டுநர் சரவணன் காயமடைந்தார். இது குறித்து சரவணன் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியது உஞ்சினி கிழக்கு தெருவை சேர்ந்த முத்து மகன் சுரேஷ் அண்ணாதுரை மகன்கள் விஜய் மற்றும் அருண் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சுரேஷ் மற்றும் விஜயை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

தலைமறைவாக உள்ள அருணை இரும்புலிக்குறிச்சி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com