

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பம் பாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட ஆறுமுகம், தவமணி, சிரஞ்சீவி ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷவாயு தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.