சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் - 2 பேர் பரிதாப பலி

சோமாலியா தலைநகர் மொகடிஷு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். #Somaliacarblast
சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் - 2 பேர் பரிதாப பலி
Published on

மொகடிஷு:

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மொகடிஷு நகரில் உள்ள பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சோமாலியா தலைநகரம்  மொகடிஷுவில் உள்ள பனாதிர் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Somaliacarblast 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com