புதுக்கோட்டையில் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு

புதுக்கோட்டையில் இருதரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
போலீசார் துப்பாக்கிச்சூடு
போலீசார் துப்பாக்கிச்சூடு
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே போசம்பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தேர்தல் முன்விரோதத்தால் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com