தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி கரூரில் ஆர்ப்பாட்டம்

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி கரூரில் ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்:

கரூர் மாவட்ட தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிறுவன தலைவர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தின் போது நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகளை திறந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பொதுச் செயலாளர் தண்டபாணி, தென் மண்டல அமைப்பு செயலாளர் சந்திர சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com