இரட்டை இலையை மீட்டெடுப்போம் - மதுரை விழாவில் தினகரன் சபதம்

மேலூரில் நடைபெற்ற விழாவில் புதிய அமைப்பின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்து பேசிய தினகரன், விரைவில் இரட்டை இலையை மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார். #TTVDinakaran #AmmamakkalMunnetrakazhagam
இரட்டை இலையை மீட்டெடுப்போம் - மதுரை விழாவில் தினகரன் சபதம்
Published on

மேலூர்:

மதுரை மேலூர் மாவட்டத்தில் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரையும், கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைக்கும் விழா இன்று காலை நடைபெற்றது.

இதற்காக, மேலூர்-அழகர் கோவில் ரோட்டில் எஸ்.பி.ஆர். திடலில் இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு காலை 10 மணிக்கு வந்த தினகரன், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர், தினகரன் தனது புதிய அமைப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். விழா திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், வரும் தேர்தல்கள் அனைத்திலும் இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் பெயரிலும், கொடியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். மேலும், அதிமுகவிடம் இருந்து இரட்டை இலையை விரைவில் மீட்டெடுப்போம். அதுவரை குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார். #TTVDinakaran #AmmamakkalMunnetrakazhagam #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com