காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதல் - ஒருவர் பலி

காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதலில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதல் - ஒருவர் பலி
Published on

காஞ்சீபுரம்:

சென்னையில் இருந்து வேலூர் நோக்கி இன்று அதிகாலை அலுமினிய பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்றது. லாரியில் அதன் உரிமையாளர் வேலூர் சங்கர் பாளையத்தை சேர்ந்த சங்கர் (45) என்பவர் இருந்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் கூட்டு ரோடு அருகே அதிகாலை 4 மணியளவில் மினி லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின் பக்கத்தில் திடீரென மினி லாரி பயங்கரமாக மோதியது.

இதில் மினி லாரியில் இருந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டிய டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com