ஆம்புலன்ஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதல் - 4 பேர் பலி

ஜெய்ப்பூர் அருகே விபத்தில் காயமடைந்தவரை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாயினர்.
ஆம்புலன்ஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதல்
ஆம்புலன்ஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதல்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரை சேர்ந்தவர் பல்ஜித் (28). இவர் இன்று தனது வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பல்ஜித் ஆல்வார் நகரில் இருந்து ஜெய்ப்பூர் நகருக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்சில் காயமடைந்த பல்ஜித் அவரது சகோதரர் பக்சந்த் மற்றும் உறவினர்கள் உள்பட மொத்தம் 6 பேர் பயணம் செய்துள்ளனர்.   

ஆம்புலன்ஸ் துஷா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி - ஆம்புலன்ஸ் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பல்ஜித் அவரது சகோதரர் மற்றும் இரு உறவினர்கள் உள்பட 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com