

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார். அதன்படி இன்று அமைச்சரவையை கூட்டி சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளார்.