திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இன்று தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து நாசம்

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இன்று தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து நாசம்
Published on

கே.கே.நகர்:

திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ளது பென்சனர் காலனி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் அதிக அளவில் குடிசை வீடுகளும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் சேர்ந்த குப்பைகளுக்கு யாரோ தீ வைத்துள்ளனர். இதில் காற்றின் வேகம் காரணமாக குப்பையில் பற்றிய தீயானது அருகில் இருந்து குடியிருப்புகளுக்கும்  பரவியது. மேலும் நெருப்பு துகள் கள் அருகிலிருந்த தனியார் நிறுவனத்தில் மேல் இருந்த கூரையில் விழுந்து மளமள வென தீ பரவியது. இதனை பார்த்த  அப்பகுதியினர் அணைக்க முயன்றும் முடிய வில்லை. உடனடியாக தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேமாக பரவிய தீ அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வீடு உள்பட 5 பேரின் வீடுகளில் பிடித்து எரிந்தது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு  துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். 

இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மொத்தம் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்படாத அளவிற்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தீ விபத்து குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com