திருச்சி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது

திருச்சி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது
Published on

திருச்சி:

பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அரசு அலுவலங்களுக்கு சென்று வருவதில் ஏற்படும் காலதாமதம், காலவிரயம், போக்குவரத்து செலவு விரயத்தை தவிர்க்கவும், அந்தந்த கிராமங்களுக்கு அரசு அலுவலர்கள் சென்று கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

திருச்சி கிழக்கு வட்டத்தில் அரியமங்கலம், திருச்சி மேற்கு  வட்டத்தில் பஞ்சப்பூர், திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் கிளிக்கூடு, மணப் பாறை வட்டத்தில் முகவனூர் தெற்கு, மருங்கா புரி வட்டத்தில் செவந்தாம் பட்டி, லால்குடி வட்டத்தில் கருடாமங்கலம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் ராசாம் பாளை யம், முசிறி வட்டத்தில் நெய்வேலி, துறையூர் வட்டத்தில் பகன வாடி, தொட்டியம் வட்டத்தில் அரங்கூர் ஆகிய கிராமங்களில் நாளை  24-ந்தேதி முகாம் நடைபெறுகிறது.  

இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாமில் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com