மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசிய பெண் பயணியிடம் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்
Published on

திருச்சி:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது மலேசியாவை சேர்ந்த பெலிசியா தாஸ் விக்டர் என்ற பெண் பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1040 கிராம் தங்கத்தை தனது உடைமைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது ஏன்? என்று பெலிசியா தாஸ் விக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்ததாக 5 பெண்கள் சிக்கினர். இன்று மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கியுள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கடத்தலில் சிக்கும் பெண்கள் குருவிகளாக செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருகிறார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com