

லண்டன்:
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியா 4-0 என அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஐ.பி.எல். தொடரில் தொடரில் விளையாட கூடாது என அந்த அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
சுமார் 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆஷஸ் தொடரினால் இங்கிலாந்து வீரர்கள் உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்த்துள்ளனர். மேலும் ஜோ ரூட் தற்சமயம் நல்ல பார்மில் இல்லாததாலும், 2018-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்த தொடர்களில் விளையாட இருப்பதாலும், அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடாமால், தனது விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன் ஐ.பி.எல்.-ல் விளையாடுவது குறித்து நாங்கள் பேசினோம். அதில் விளையாடாமல் ஓய்வெடுக்குமாறு ஜோ ரூட்டை நான் அறிவுருத்தினேன். கடைசி இரண்டு ஆண்டுகளில் டி20 தொடர்களின் போது மட்டுமே அவருக்கு ஓய்வு கிடைக்கிறது. அவர் 50 மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பைகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும். டி20 போட்டிகளில் விளையாடாமல் இருப்பதால் தனது திறமை தடைபடுவதாக ரூட் கருதுகிறார். அதுவும் சரிதான். இதில் முடிவெடுப்பது கடினம் தான். ஆனால் தைரியமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும், என அவர் கூறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் போதும் டிரிவொர் பெய்லிஸ் அந்த அணியின் பயிற்சியாளாக செயல்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. #JoeRoot #IPLauction2018 #TrevorBayliss #tamilnews