ஊட்டியில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம்: அரசு டாக்டர் கைது

ஊட்டியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டியில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம்: அரசு டாக்டர் கைது
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் எதிரே பல் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சரவணன். அரசு டாக்டராகவும் உள்ளார்.

இவரது மருத்துவமனைக்கு ஊட்டியை சேர்ந்த இளம் பெண் தனது தாயுடன் சிகிச்சை பெற வந்தார். டாக்டர் சரவணன் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாத நிலையில் அவரது தாய் பணம் எடுத்து வருவதாக கூறி வீட்டிற்கு சென்று விட்டார்.

திடீரென இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு சென்றனர். அப்போது இளம்பெண் தன்னிடம் டாக்டர் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாக்டர் சரவணனை அடித்து உதைத்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் எற்பட்டது.

மேலும் மருத்துவமனையையும் சூறையாடினார்கள். தகவல் அறிந்து ஊட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் டாக்டரை தாக்கிய பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்றனர்.

டாக்டர் சரவணனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com