ஜம்மு காஷ்மீர் - டிரால் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #TralEncounter
ஜம்மு காஷ்மீர் - டிரால் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியாக் சுட தொடங்கினர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில்

ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #TralEncounter

X

Maalai Malar
www.maalaimalar.com