புதிய பாட திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் 9-ம் வகுப்பு புதிய பாட புத்தகம் திட்டம் குறித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதிய பாட திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
Published on

அரியலூர்:

அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் 9-ம் வகுப்பு புதிய பாட புத்தகம் திட்டம் குறித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அதிகாரி செல்வம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கியு ஆர் கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி எடுத் துரைக்கப்பட்டது. இது ஆன் லைன் மற்றும் ஆப் லைன் மூலம் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புத்தகம் எடுத்து செல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்கள் கியுஆர் கோடு மூலம் காணொலி மூலம் பாடத்திட்டத்தை அறிந்து படித்தல் மூலம் அதனை புரிந்து, அறிந்து படிக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சி முகாம் தமிழ், ஆங்கிலம், கணிதம் என ஒவ்வொரு படத்திற்கும் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

6-வகுப்பு ஆசிரியர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கீழப்பழுவூர் சாமி பள்ளியிலும் பாட புத்தகம் குறித்த ஆசிரியர்களுக்கு விளக்க பயற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட திட்டங்கள் மாணவர் களின் திறனானது மேம்படுத்தப்படும். மாணவர்கள் தங்களை அனைத்து விதத்திலும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களிடம் போட்டி போட முடியும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com