மத்திய மந்திரி தோமர் மற்றும் சதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய மந்திரி தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பும், சதானந்த கவுடாவுக்கு வேதி மற்றும் உர துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. #NarendraSinghTomar #SadanandaGowda
மத்திய மந்திரி தோமர் மற்றும் சதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு
Published on

நாடாளுமன்ற விவகார துறை மற்றும் வேதி மற்றும் உர துறைக்கான மந்திரி அனந்த குமார் நேற்று உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிலையில், அனந்த குமார் மறைந்த நிலையில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக, ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com