ஆதார் எண் மூலம் உடனடி பான் கார்டு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பான் கார்டு, ஆதார் (கோப்புப் படம்)
பான் கார்டு, ஆதார் (கோப்புப் படம்)
Published on

பாராளுமன்றத்தில் இன்று 2020-21 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விவாசாயத்துறை, போக்குவரத்துறை  போன்ற பல்வேறு துறைகளுக்கான மேம்பாட்டு திட்டங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதில் ஒரு முக்கிய  அம்சமாக பான் அட்டை பெறுவதை எளிமையாக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். 

அதன்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவசியமான பான் அட்டை இனி ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில்  உடனடியாக வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் இதற்காக தனி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யவேண்டியதில்லை,  என கூறப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com