

சென்னை:
கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா ரூ.2000 செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #TNAssembly