

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொள்ளாச்சி கெடு மேடு அருகில், கார் விபத்துக்குள்ளாகி, வாய்க்காலுக்குள் கவிழ்ந்ததில், மசக்காளி பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் அவரது மனைவி சித்ரா 2 குழந்தைகள் நந்தனா, பூஜா மற்றும் பன்னீர்செல்வம் மனைவி லதா அவரது குழந்தைகள் கவியரசு, தாரணி மற்றும் சுப்பிரமணியம் மனைவி சுமதி ஆகிய 8 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
இவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.