

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செயற்குழு கூட்டத்தில் பேசிய தலைவர்கள், கருணாநிதியின் கட்சிப் பணிகள், ஆட்சிப் பணிகள் மற்றும் அவரது பெருமைகளை நினைவுகூர்ந்தனர். நிறைவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.