திட்டக்குடி அருகே மரக்கடை உரிமையாளருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

திட்டக்குடி அருகே மரக்கடை உரிமையாளருக்கு அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
Published on

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 45). இவர் ராமநத்தம் சர்வீஸ் சாலையில் வாடகை இடத்தில் மரக்கடை நடத்தி வருகிறார்.

தினமும் இரவில் மரக்கடையில் படுத்து தூங்குவது வழக்கம்.

அதுபோல் நேற்று இரவும் வேலாயுதம் சாப்பிட்டு முடித்துவிட்டு மரக்கடையில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்மனிதர்கள் சிலர் மரக்கடைக்குள் புகுந்தனர். பின்பு அங்கு தூங்கி கொண்டிருந்த வேலாயுதத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

தலை, கழுத்து, முகம், கை போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த வேலாயுதம் கூச்சல்போட்டு அலறினார்.

இதை தொடர்ந்து அந்தகும்பல் அங்கிருந்து தம்பி சென்றுவிட்டது. இன்று காலை மரக்கடைக்கு சென்றவர்கள் ரத்தவெள்ளத்தில் வேலாயுதம் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தர். உடனடியாக அவர்கள் இது குறித்து ராமநத்தம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். மரக்கடைக்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்த வேலாயுதத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ்மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலாயுதத்துக்கும் சிலருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் மரக்கடைக்குள் புகுந்து வேலாயுதத்தை வெட்டியது தெரியவந்தது. அவரை வெட்டிய தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com