பைக் மோதி முதியவர் பலி- விபத்து வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

பைக் மோதி முதியவர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பைக் மோதி முதியவர் பலி- விபத்து வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி (62). கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் காசி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த நூங்கம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சத்தியராஜிடம் (23) விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர் விபத்து ஏற்படுத்திய சத்தியராஜிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து சத்தியராஜை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com