மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.13½ லட்சம் மோசடி- இளம்பெண் கைது

திருத்தணி அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைதானார். மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதான திரிபுரசுந்தரி
கைதான திரிபுரசுந்தரி
Published on

திருவள்ளூர்:

திருத்தணி அருகே உள்ள கூளூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக அரக்கோணம் கும்மினிப்பேட்டையை சேர்ந்த மூர்த்தி மற்றும் பாண்டிச்சேரி கொட்டுப்பாளையத்தை சேர்ந்த குகன் அவரது மனைவி திரிபுரசுந்தரி ஆகியோர் தெரிவித்தனர்.

இதனை நம்பி ஜெயக்குமாரும் அவரது உறவினர்கள் 4 பேரும் மின்வாரிய வேலைக்காக ரூ.13½ லட்சம் அவர்களிடம் கொடுத்தனர். ஆனால் மூர்த்தி தரப்பினர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்க மறுத்து இழுத்தடித்தனர்.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயக்குமார் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.பி.சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன், சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் வேலை வாங்கிக் கொடுப்பதாக மூர்த்தி, குகன் அவரது மனைவி திரிபுர சுந்தரி ஆகியோர் ரூ.13½ லட்சம் மோசடி செய்தது தெரிந்தது.

இதையடுத்து திரிபுரசுந்தரியை போலீசார் கைது செய்தனர். குகன், மூர்த்தியை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com