திருப்பதி அருகே பெண் டாக்டர் மர்ம மரணம்

திருப்பதி அருகே பெண் டாக்டர் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி அருகே பெண் டாக்டர் மர்ம மரணம்
Published on

திருப்பதி:

திருப்பதி அருகே உள்ள பீலேர் ஜாக்குதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ். இவரது மனைவி ஷில்பா (வயது 44) டாக்டர். நேற்று வீட்டில் உள்ள அறையில் ஷில்பா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவலறிந்த பீலேர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷில்பா உடலை மீட்டு திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஷில்பா திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் மேல் படிப்பு (எம்.டி.) படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவ கல்லூரியில் உள்ள சீனியர் டாக்டர் மிரட்டுவதாக கவர்னர், முதல்-அமைச்சர் தனி பிரிவுக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ஷில்பா தூக்கில் பிணமாக தொங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com