சென்னிமலை அருகே இடி தாக்கி 6 ஆடுகள் பலி

சென்னிமலை அருகே மேய்ந்து கொண்டிருந்த 6 ஆடுகள் மீது இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தன.
சென்னிமலை அருகே இடி தாக்கி 6 ஆடுகள் பலி
Published on

சென்னிமலை:

சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோடு அடுத்த கொம்ம கோவில் ஆதி திராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர் ஆடு மேய்த்து பிழைத்து வருகிறார். இவர் 13 பெரிய செம்பறி ஆடுகள், 17 குட்டிகள் வளர்த்து வருகிறார். இந்த கால்நடைகளை பெருமாள் நேற்று மாலை கொம்ம கோவில் அருகில் உள்ள பாலமுருகன் குடியிருப்பு பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பலத்த இடி ஒன்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் விழுந்தது. இந்த இடி தாக்குதலில், காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 6 பெரிய செம்பறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தனது வெள்ளாடுகள் இறந்ததை பார்த்து பெருமாளும் அவரது மனைவி பாப்பாவும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கொம்மகோவில் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com