நெல்லை அருகே பாலத்தில் மினி வேன் மோதி 3 பேர் உயிரிழப்பு

நெல்லை அருகே பாலத்தின்மீது மினி வேன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். #Nellaiaccident
நெல்லை அருகே பாலத்தில் மினி வேன் மோதி 3 பேர் உயிரிழப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ளது சுப்பையாபுரம். இப்பகுதியில் உள்ள பாலத்தின் மீது இன்று ஒரு மினி வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேன் கடுமையாக சேதம் அடைந்தது. வேனுக்குள் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் துடித்தனர்.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் முருகன் (55) முத்துக்குமார் (30) மற்றும் மாடசாமி (22) என தெரியவந்துள்ளது.

திருமணம் முடிந்து, மணமகன் இல்லத்திற்கு சென்று சீர்வரிசை பொருட்களை கொடுத்து விட்டு ஊர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.  இவ்விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.  #Nellaiaccident

X

Maalai Malar
www.maalaimalar.com