கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து மூன்று பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து மூன்று பேர் உயிரிழப்பு
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் பொலக்குணம் கிராமத்தில் கிணறு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி மண்ணை அள்ளி வெளியேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஒரு கரையில் இருந்து திடீரென மண் சரிந்து விழுந்து தொழிலாளர்களை அமுக்கியது.

இதில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #TNMudslide

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com