மராட்டியத்தில் ரெயில் மோதி 3 தொழிலாளர்கள் பலி

மராட்டியத்தில் தண்டவாள பராமரிப்பு பணியின்போது ரெயில் மோதி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். #Maharashtra #TrainAccident #TejasExpress
மராட்டியத்தில் ரெயில் மோதி 3 தொழிலாளர்கள் பலி
Published on

மும்பை:

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள ஜிட்டே ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அந்த நேரத்தில் கோவாவில் இருந்து மும்பை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தனர்.

இதில், ரெயில் கண் இமைக்கும் நேரத்தில் தொழிலாளர்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிச்சென்றது. இதில், தூக்கி வீசப்பட்டு தொழிலாளர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com