தெலுங்கானா: கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் இன்று கார் மீது சரக்கு லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் படுகாயமடைந்தனர்.
தெலுங்கானா: கார் மீது சரக்கு லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா-கட்வேல் மாவட்டத்தில் உள்ள பீச்சுபல்லி பகுதியில் இன்று கார் மீது சரக்கு லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

கர்னூல் நோக்கி சென்று கொண்டிருந்த பொலீரோ காரின் மீது சரக்கு லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com