தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்குகளில் ஆவணங்கள், தடயங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். இதேபோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். அதன்படி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையிலான போலீசார் 4 டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com