

உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பிரேசில் கருதப்படுகிறது. அதற்கு அந்த அணியில் கேப்டன் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ, மார்சிலோ போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்திருப்பதே காரணம்.
இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவானான மரடோனோ, தற்போதைய பிரேசில் அணி நெய்மரை மட்டுமே சார்ந்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மரடோனா கூறுகையில் ‘‘புதிய பயிற்சியாளர் டைட் வந்த பிறது அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 21 போட்டிகளில் 17-ல் வெற்றி பெற்றுள்ளது. 47 கோல்கள் அடித்துள்ள நிலையில், 5 கோல்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.