திருவிடைமருதூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

திருவிடைமருதூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
திருவிடைமருதூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே எஸ். புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லோடு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர்.

இதில் லோடு ஆட்டோவில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று அதிகாரிகள் விசாரித்தனர்.

பின்னர் லோடு ஆட்டோவில் வந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் நாயுடு என்பவரது மகன் ஜெயராமன் (வயது 43) என்பது தெரிய வந்தது.

அப்போது அவர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பிக்காததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருவிடைமருதூர் தாலுகா அலுவலதத்தில் உதவி அலுவலர் ஜெயபாரதியிடம் பறக்கும் படையினர் ஓப்படைத்தனர். #LokSabhaElections2019

X

Maalai Malar
www.maalaimalar.com