திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம்: லட்சக்கணக்காண பக்தர்கள் தரிசனம்

திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க தியாகராஜ சுவாமி கோவிலில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்கியது. தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம்: லட்சக்கணக்காண பக்தர்கள் தரிசனம்
Published on

இக்கோவிலின் ஆழித் தேரானது ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இக் கோவில் விழாக்களில் பங்குனி உத்திர விழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித் தேரோட்டம், கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.

30 அடி அகலம், 30 அடி உயம், 220 டன் எடை கொண்ட ஆழித்தேரானது மூங்கில் மற்றும் பனங்கட்டைகள் கொண்டு மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு 300 டன் எடையுடன் உள்ளது.

திருவாரூர் ஆழித் தேராட்டம் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் காமராஜ், கலெக்டர் நிர்மல் ராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தேர் நகர தொடங்கியதும் பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என் பக்தி முழக்கம் எழுப்பினர். தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரானது கீழ வீதி, மேல வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக இன்று மாலை 5 மணிக்கு நிலைக்கு வருகிறது. ஆழித் தேருக்கு பின்னால் சண்டிகேஸ்வரர், அம்மன் தேர் இழுத்து வரப்பட்டது.

தேரோட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆழித் தேராட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com