திருவண்ணாமலை கலெக்டர் ஆபீஸ் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தகராறில் திருவண்ணாமலை கலெக்டர் ஆபீஸ் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கலெக்டர் ஆபீஸ் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
Published on

திருவண்ணாமலை:

கலசபாக்கம் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 67). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள், மகன் கார்த்திகேயன் (32).

இவர்கள் இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வாசலில் நின்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீப்பெட்டியை பிடுங்கினர்.

அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்து இருப்பதாகவும், இதுபற்றி கலசபாக்கம் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் கூறினர்.

3 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையயம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com